Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணிக்கான கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன: காங்கிரஸ் பொதுச்செயலாளர் அறிவிப்பு..

Siva
ஞாயிறு, 3 மார்ச் 2024 (14:10 IST)
மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் அனைத்து 42 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் திரிணாமுல் கட்சிக்காக கூட்டணிக்கான கதவுகள் இன்னும் திறந்த இருப்பதாக தெரிவித்துள்ளார் 
 
இந்தியா கூட்டணி உருவாக மேற்கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய காரணம் என்றும் பாஜகவை தோற்கடிப்பதற்கு அவர் முன்னுரிமை கொடுத்து வருகிறார் என்றும் எனவே காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி மேற்குவங்கத்தில் அமையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கூட்டணிக்கான கதவுகளை நாங்கள் மூடவில்லை, 42 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ஒருதலைபட்சமாக மம்தா பானர்ஜி தான் அறிவித்திருக்கிறார், ஆனால் அதே நேரத்தில் இன்னும் பேச்சு வார்த்தைகள் தொடர்கின்றன, கூட்டணி கதவுகள் இன்னும் திறந்து உள்ளன என்று அவர் தெரிவித்தார் 
 
தமிழகத்தில் அதிமுகவுக்காக கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கிறது என பாஜக கூறிய நிலையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்காக கூட்டணி கதவுகள் திறந்து உள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments