Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக-கேரள எல்லையில் வாகனங்கள் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

idkki
Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (13:20 IST)
தமிழக-கேரள எல்லையில் வாகனங்கள் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?
தமிழக-கேரள எல்லையில் திடீரென அரசு பேருந்துகள் உள்பட வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழக கேரள எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் திடீரென வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அமல்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்துவதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 
 
இடுக்கி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மத்திய வனத்துறை சமீபத்தில் அறிவித்தது. எனவே வனப்பகுதியின் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள எல்லைக்குள் குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், ஆகியவை இருக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது 
 
இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணி கட்சிகளான கேரள காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் திடீரென இன்று போராட்டம் நடத்துவதால் அரசு பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments