Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார்: கார்கே பேச்சால் காங்கிரஸ் அதிர்ச்சி..!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (17:41 IST)
ராஜீவ் காந்தி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார் என்று பேசுவதற்கு பதிலாக ராகுல் காந்தி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார் என மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே வெளியிட்டார்.

இதில் விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன், மாணவர்களுக்கு மடிக்கணினி,  குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் உட்பட பல அறிவிப்புகள் வெளியாகின.

 தேர்தல் அறிக்கை வெளியிட்டவுடன் பேசிய மல்லிகார்ஜுன கார்கே பேசியபோது, ‘ ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர் என்று பேசினார். இதையடுத்து தனது தவறை திருத்திக் கொண்டு ராஜீவ் காந்தி என்று பேசினார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments