Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காங்கிரஸ் தலைவர் யார்? இன்று வாக்கு எண்ணிக்கை!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (07:30 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 10மணிக்கு எண்ணப்படுகின்றன. 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது
 
நாடு முழுவதும் பல மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று காலை 10 மணிக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது
 
இன்று காலை 10 மணிக்கு வாக்குகள் எண்ண தொடங்கியவுடன் ஒரு சில மணி நேரங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது
 
சோனியாகாந்தி ஆதரவு பெற்ற வேட்பாளர் என கருதப்படும் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் ப சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சசிதரூர் அவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளதாக கூறப்படுவதால் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது
 
நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இந்த தேர்தலின் முடிவை பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments