Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளிநாடு பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி

வெளிநாடு பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி
, வியாழன், 2 ஜூலை 2015 (01:38 IST)
கடந்த மாதம் வெளிநாடு சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்தியா திரும்பினார்கள். 
 

 
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கடந்த மாதம் வெளிநாடு சென்றார். அவருடன் அவரது மகள் பிரியங்கா காந்தியும் சென்றிருந்தார். 
 
இந்த நிலையில், இவர்களுக்கு அடுத்து, கடந்த மாதம் 20ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தியும் வெளிநாட்டிற்குப் பறந்தார். 
 
இது குறித்து அக் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜி வாலா கூறும்போது, 
 
தனது சொந்த விஷயமாகக் குறுகிய காலப் பயணமாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாடு சென்றுவிட்டு, திரும்பியுள்ளனர். அதே போல, தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு ராகுல் காந்தியும் டெல்லி திரும்பிவிட்டார் என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil