Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளுமன்ற கூட்டத்திற்கு ஒரு காங்கிரஸ் எம்பி கூட வரவில்லை.. என்ன காரணம்?

parliament
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (12:14 IST)
இன்று குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்றைய கூட்ட தொடரில் ஒரு காங்கிரஸ் எம்பி கூட வரவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளன. 
 
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்த கூட்டத்தை தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் உரையாற்றி வருகிறார்.
 
இந்த நிலையில் திமுக எம்பிக்கள் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்ட நிலையில் காங்கிரஸ் எம்பிக்கள் யாரும் இன்று கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நேற்று காஷ்மீரில் முடிவடைந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்காக காங்கிரஸ் எம்பிக்கள் சென்றிருந்ததாகவும் அங்கிருந்து திரும்பி வருவதற்கு விமானம் கிடைக்கவில்லை என்பதால் காங்கிரஸ் எம்பிக்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது
 
ஸ்ரீ நகரில் இருந்து டெல்லி வருவதற்கான விமானம் வானிலை காரணமாக காலதாமத்துடன் இயக்கப்பட்டு வருவதால் குறிப்பிட்ட நேரத்தில் காங்கிரஸ் எம்பிக்களால் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உன்னை போட்டு தள்ள ஒரு ஏவுகணை போதும்! – போரிஸ் ஜான்சனை மிரட்டிய ரஷ்ய அதிபர்!