Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (12:06 IST)
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களை அமலாக்கத்துறை கைது செய்வதற்கு ஜூலை 10-ம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது தெரிந்ததே.
 
இருப்பினும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸின்படி 
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ப.சிதம்பரம் ஆஜராகியுள்ளார்.
 
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2வது முறையாக விசாரணைக்கு ப.சிதம்பரம் ஆஜராகிறார் என்பது குறிபிடத்தக்கது. ஏற்கனவே இதே வழக்கிற்காக கடந்த 5ஆம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இன்றும் அதேபோல் மாலை வரை அவரிடம் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
P.Chidambarm 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments