Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியைப் புகழ்ந்த காங்கிரஸ் முதல்வர் !

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (18:09 IST)
பிரதமர் மோடி வெளி நாடுகளுக்குச் செல்லும் போது அவருக்கு சிறந்த மரியாதை  அளிக்கப்படுவதாக காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
 

இந்திய அரசியலில் சுதந்திரத்திற்குப் பின்,  காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக கட்சிக்கும் தான் பொதுத்தேர்தலில் பலத்த போட்டி ஏற்பட்டு வருகிறது.

மோடி பிரதமராகப் பதவியேற்றது முதல் பாஜக கட்சி அடுத்தடுத்த நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும்  பெருமளவு வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக வெற்றி பெற்ற மாநிலங்களில் தற்போது ஆட்சி செய்து வருகிறது.

தற்போது,  இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் 2 தான்! ஆனால், பாஜக 123 மா நிலங்களில் ஆட்சி செய்து வருகிறது.

சமீபத்தில்,காங்கிரஸ் தலைவராக கார்க்கே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி மீண்டும் எழுச்சி பெரும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தானில் கடந்த 1913 ஆம் ஆண்டு  நடந்த மங்கார் படுகொலையை  நினைவுகூறும் விதமாக மங்கார் தம் கி கவுரவ்  நிகழ்ச்சி பன்ஸ்வாராவில் நடந்தது. இதில், அம்மா நில முதல்வ அசோக் கெலாட் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதில்,பேசிய முதல்வர் அசோக் கெலாட், ‘’ காந்தி தேசத்தில் பிரதமராக உள்ள பிரதமர் மோடிக்கு,  வெளி நாடுகளுக்கு செல்லும்போது சிறந்த மரியாதை அளிக்கப்படுகிறது.இங்கிருந்து ஒரு பிரதமர் வருவதை அவர்கள் பெருமையாக உணர்கின்றனர்’’ என்று புகழ்ந்துள்ளார்.

இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments