Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு மனைவி இருந்தால் ரூ.2 லட்சம்: காங்கிரஸ் வேட்பாளரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 10 மே 2024 (14:47 IST)
இரண்டு மனைவி இருந்தால் இரண்டு லட்சம் என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தேர்தல் பிரச்சார மேடையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியான நிலையில் அதில் மகாலட்சுமி திட்டம் என்று அறிவிப்பு பலரையும் கவர்ந்தது என்பதும் இந்த திட்டத்தின்படி ஏழை குடும்ப பெண்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருந்தால் அவர்களுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் காந்தி லால் என்பவர் இந்த திட்டத்தை தொடர்புபடுத்தி ஒருவருக்கு இரண்டு மனைவி இருந்தால் ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் கிடைக்கும் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
எங்கள் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று கூறியுள்ளோம், அது அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும்,  எனவே ஒருவர் இரண்டு மனைவிகளை கொண்டவராக இருந்தால் அந்த இருவரும் அந்த திட்டத்தின் கீழ் வருவார்கள், இருவருக்கும் தலா ஒரு லட்சம் என மொத்தம் 2 லட்சம் கிடைக்கும்’ என்று கூறியுள்ளனர். காந்திலாலின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பாஜக கண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments