Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு மனைவி இருந்தால் ரூ.2 லட்சம்: காங்கிரஸ் வேட்பாளரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 10 மே 2024 (14:47 IST)
இரண்டு மனைவி இருந்தால் இரண்டு லட்சம் என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தேர்தல் பிரச்சார மேடையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியான நிலையில் அதில் மகாலட்சுமி திட்டம் என்று அறிவிப்பு பலரையும் கவர்ந்தது என்பதும் இந்த திட்டத்தின்படி ஏழை குடும்ப பெண்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருந்தால் அவர்களுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் காந்தி லால் என்பவர் இந்த திட்டத்தை தொடர்புபடுத்தி ஒருவருக்கு இரண்டு மனைவி இருந்தால் ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் கிடைக்கும் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
எங்கள் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று கூறியுள்ளோம், அது அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும்,  எனவே ஒருவர் இரண்டு மனைவிகளை கொண்டவராக இருந்தால் அந்த இருவரும் அந்த திட்டத்தின் கீழ் வருவார்கள், இருவருக்கும் தலா ஒரு லட்சம் என மொத்தம் 2 லட்சம் கிடைக்கும்’ என்று கூறியுள்ளனர். காந்திலாலின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பாஜக கண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments