Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து செல்போனில் பரப்பிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது

பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து செல்போனில் பரப்பிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
, ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (15:44 IST)
பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து அதை செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கு அனுப்பிய பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்யபட்டுளார்.
 
பெங்களூரு ஆனேக்கல்லை சேர்ந்தவர் வெங்கடேஷ் என்கிற புட்டசாமி. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் ஆனது.
 
மேலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷ், மைசூருவை சேர்ந்த ஒரு பெண்ணை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் முன்பு, தனது முதல் மனைவி நடத்தை சரியில்லாததால் அவளுடன் வாழவில்லை என்று 2ஆவது மனைவியிடம் கூறியுள்ளார்
 
எனவே 2ஆவது மனைவியும் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர் பல நாட்கள் இரவில் 2–வது மனைவியுடன் தங்காமல் வெளியே சென்று வந்துள்ளார். இதை அறிந்த 2–வது மனைவி அவர் எங்கு செல்கிறார் என்று கண்காணித்துள்ளார்.
 
அப்போது, வெங்கடேஷ் முதல் மனைவியை அடிக்கடி சந்தித்து அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த 2–வது மனைவி, இதுகுறித்து வெங்கடேசிடம் கேட்டுள்ளார்.
 
அப்போது, எனது முதல் மனைவியுடன் சேர்ந்து தான் குடும்பம் நடத்தி வருகிறேன். அவரது பெற்றோர் கொடுத்த நகை, பணத்தை திரும்ப கேட்கிறாள். இதனால், அவளுடன் சேர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், பணம் தந்தால், அவளைப் பிரிந்து வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
 
இதனால் முதல் மனைவி மற்றும் 2ஆவது மனைவியுடன் வெங்கடேஷ் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, வெங்கடேசின் செல்போனை, அவரது 2–வது மனைவி எடுத்து பார்த்துள்ளார்.
 
அப்போது, வெங்கடேஷ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் அதில் இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பெங்களூரு அருகே உள்ள ஆனேக்கல் வந்து, வெங்கடேசின் வீட்டு அருகே வசித்து வருபவர்களிடம் விசாரித்தார்.
 
அப்போது, இரவில் வெங்கடேஷ் பல பெண்களை வீட்டிற்கு அழைத்து சென்றதை அவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர் வெங்கடேஷ் வேலை பார்க்கும் தனியார் நிறுவனத்திற்கு சென்றும் விசாரித்துள்ளார். அங்கு வேலை பார்ப்பவர்களும், வெங்கடேசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை தெரிவித்தனர்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசின் 2ஆவது மனைவி, சம்பவம் குறித்து மைசூரு உதயகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று வெங்கடேசை கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil