Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த தமிழர் முருகன் மீது என்ன ஒரு பாசம்! இவர்தான் மக்களின் முதல்வர்

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (22:15 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் 63 குழந்தைகள் இறந்தபின்னரும் அந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதலும் நிவாரணமும் கூறாமல், பழியை யார் மீது போட்டு ஆட்சியை காப்பாற்றலாம் என்று தப்பிக்கும் மனப்பான்மை உள்ள முதல்வர் இருக்கும் இதே நாட்டில்தான் தெரியாமல் ஒரு தவறு நேர்ந்துவிட்டது, அந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது மட்டுமின்றி பிராயசித்தம் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ள முதல்வரும் இருக்கின்றார்.



 
 
ஆம், கேரளாவில் சிகிச்சை மறுக்கப்பட்டு இறந்த தமிழரான முருகனின் மரணத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், தற்போது தமது மார்க்கிஸ்ட் கட்சி, முருகனின் குழந்தைகள் கல்விச்செலவை முழுவதும் ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கேரள அரசு சார்பில் அளிக்கப்படும் உதவிகள் குறித்தும் இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
கேரள முதல்வரின் இந்த அறிவிப்பு அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது. ஒரு முதல்வராக மட்டுமின்றி ஒரு நல்ல மனிதராகவும் விளங்கி வரும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழக மக்கள் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments