Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

Mahendran
வியாழன், 16 மே 2024 (12:55 IST)
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காமெடி நடிகர் சியாம் ரங்கீலா என்பவர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து உள்ளது. 
 
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த ஷ்யாம் ரங்கீலா என்பவர் போட்டியிட சமீபத்தில் வேட்பாளர் தாக்கல் செய்தார். இவர் ஒரு மிமிக்ரி கலைஞர் என்பதும் ராகுல் காந்தி, மோடி போல் மிமிக்ரி நகைச்சுவை நிகழ்ச்சி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 ஆனால் இவரது நிகழ்ச்சிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த ஷ்யாம், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேசையாக போட்டியிடப் போவதாக அறிவித்தார். 
 
இந்த நிலையில் அவரது வேட்புமனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் அவரது வேட்புமனுவை நிராகரித்துள்ளது. அவர் தாக்கல் செய்த ம் பிரமாண பத்திரத்தில் குறைகள் இருந்ததாகவும் வேட்பாளர் பின்பற்ற வேண்டிய நடைமுறை சம்பிரதாயங்களை அவர் பின்பற்றவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments