Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலி கடித்ததில் கோமாவில் இருந்த நோயாளி உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (13:28 IST)
அரசு மருத்துவமனையில் கோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை அரசு மருத்துவமனையில்  பர்மிந்தர் குப்தா(27) என்ற இளைஞர் விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். விபத்து ஏற்பட்டு மூளையில் ரத்தம் உறைந்து விட்டதால், கோமா நிலைக்கு சென்றார்.
 
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் பொது வார்டிற்கு மாற்றப்பட்டார்.  மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான எலிகள் இருப்பதாக, குப்தாவின் தந்தை, மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அவர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் கோமாவில் இருந்த குப்தாவின் கண்களை, எலிகள் கடித்துள்ளன. இதனால் அவரது கண்களில் அதிக ரத்தம் வந்துள்ளது. இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த குப்தா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அலட்சியத்தால், நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments