Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டு வல்லுறவு செய்ததாக பொய் சொல்லிய பெண் தற்கொலை!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:16 IST)
தெலங்கானா மாநிலத்தில் தன்னை 6 பேர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்துவிட்டதாகப் பொய் கூறிய மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அந்த மாணவி படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி அவர் வீட்டுக்கு தாமதமாக வந்தபோது பெற்றோரிடம் தன்னை ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்ததாகக் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியான பெற்றோர் காவல்துறையில் புகார் அளிக்க நடந்த விசாரணையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் அந்த பெண் தாமதமாக வந்ததை மறைப்பதற்காக அப்படி பொய் சொல்லியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இப்போது அந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மயங்கிய நிலையில் அவரை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்ற போது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இது சம்மந்தமாக இப்போது விசாரணை நடந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்