Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி முறைகேடு வழக்கு: முன்னாள் முதல்வர் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (10:49 IST)
இந்தியாவின் முக்கிய ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஒன்றான நிலக்கரி முறைகேடு வழக்கு கடந்த சில ஆண்டுகளாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது

இந்த தீர்ப்பின்படி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உட்பட 6 பேர் குற்றவாளி என டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை நாளை அறிவிக்கவிருப்பதாக டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஜ்ஹாரா என்ற பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதில் மிகப்பெரிய அளவில்  முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து சி.பி.ஐ. இதுகுறித்து விசாரணை செய்து வந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் குப்தா, முன்னாள் ஜார்க்கண்ட் தலைமைசெயலர் ஏ.கே. பாசு உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments