Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி சுரங்க முறைகேடு: மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த உத்தரவு

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2014 (11:18 IST)
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த சிபிஐ-க்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நிலச்சரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, அப்போது நிலக்கரி சுரங்கத் துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த மன்மோகன் சிங்கிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த விசாரணையின்போது கேள்வி எழுப்பியிருந்தது.
 
இந்நிலையில், நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து ஜனவரி 27ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
 
ஹிண்டால்கோ நிறுவன வழக்கை முடித்துக் கொள்வதாக கூறிய சிபிஐ கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனம் தொடர்பு குறித்து மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் நிலக்கரித் துறை செயலர் பி.சி.பரேக் தொடர்பு குறித்தும் சிபிஐ விசாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments