Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய முதல்வர்

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (13:15 IST)
தீபாவளி பண்டிகையொட்டி புதுச்சேரியில் உள்ள 33 எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கியுள்ளார்.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி அட்டைதாரர்களுக்கு ரூ.490 வழங்கப்படு  என அரசு அறிவித்தது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு அறிவித்ததாவது: தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்குப் பதில் ரூ.490 வழங்கப்படும். 10 கிலோ அரிசி 2 கிலோ சர்க்கரைக்குப் பதில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் ரூ. 490 செலுத்தப்படும் என அறிவித்தது.

மேலும்,  3.37 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 490 வழங்க ரூ.16.53 கோடி அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியானது.
 

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி புதுச்சேரியில் உள்ள 33 எம்.எல்.ஏக்களுக்கும் தலா 500 பட்டாசு பெட்டிகளும், 500 கிலோ இனிப்புகளை பரிசாக முதல்வர் ரங்கசாமி வழங்கியுள்ளார்.

இதனால், புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழக பாஜக தலைவர் பதவி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தேர்தல் அதிகாரி..!

பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு.. பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments