ஒரு முதலமைச்சர், 2 துணை முதலமைச்சர்கள்: ஏக்நாத் ஷிண்டே கொடுத்த விளக்கம்..!

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (15:54 IST)
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே என்ற ஒரு முதலமைச்சரும் தேவேந்திர பட்நாவிஸ் என்ற துணை முதலமைச்சரும் இருந்த நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் மேலும் ஒரு துணை முதலமைச்சர் ஆக பதவியேற்றுக்கொண்டார். 
 
நேற்றுவரை எதிர்க்கட்சி தலைவராக இருந்த அஜித் பவார் இன்று தனது ஆதரவாளர்கள் எம்எல்ஏக்களுடன் கவர்னரை சந்தித்து அரசியல் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஒரு முதலமைச்சர் இரண்டு துணை முதல் அமைச்சர் குறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறிய விளக்கம் பின்வருமாறு:
 
தற்போது மகாராஷ்டிராவில் ஒரு முதலமைச்சரும் 2 துணை முதலமைச்சர்களும் உள்ளோம். இரண்டு இயந்திரங்களை கொண்டு இயங்கிய அரசு, தற்போது 3 இயந்திரங்களை கொண்டுள்ளது. மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக, அஜித் பவாரையும் அவரது ஆதரவாளர்களையும்  வரவேற்கிறேன். அஜித் பவாரின் அனுபவம் மகாராஷ்டிராவை வலுப்படுத்தும்"என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments