Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பத்தாம் வகுப்பு மாணவி, துப்பாக்கி முனையில் ஐந்து பேரால் பாலியல் பலாத்காரம்

பத்தாம் வகுப்பு மாணவி, துப்பாக்கி முனையில் ஐந்து பேரால் பாலியல் பலாத்காரம்
, செவ்வாய், 29 ஜூலை 2014 (19:50 IST)
மேற்கு தில்லியின் உத்தம் நகர்ப் பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், துப்பாக்கி முனையில் ஐந்து பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஐவருள் இருவர், 18 வயதுக்குக் கீழானவர்கள். 
 
இந்தச் சம்பவத்தை அவர்கள் செல்பேசியில் பதிவு செய்ததாகவும் இதை வெளியில் சொன்னால், இந்த வீடியோவை எம்.எம்.எஸ். ஆகப் பரப்பிவிடுவோம் என அவர்கள் மிரட்டியதாகவும் அந்த மாணவி அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
 
இந்தச் சம்பவம், 2014 ஜூலை 19 அன்று, மாணவி தனது பள்ளிக்குச் செல்லும் வழியில் நடந்துள்ளது. அந்த மாணவி அளித்த வாக்குமூலத்தில், குற்றம் சாற்றப்பெற்ற நால்வரில் 18 வயதுக்குக் கீழுள்ள இருவரும் தான் அறிந்த நபர்கள் என்றும் இந்த நால்வரும் தன்னை ஜரோடா பகுதியில் சுரேந்தர் பெகல்வான் என்பவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கே இந்த ஐவரும் தன்னைத் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார்.
 
மாணவி சில சிக்கல்களை அனுபவித்த காரணத்தால், தன் பெற்றோரிடம் தெரிவித்தார். அதன் பிறகு பெற்றோர், காவல் நிலையத்தில் புகாரைப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து 2014 ஜூலை 28 அன்றுதான் இந்தச் சம்பவம், வெளியே தெரிந்தது. 
 
காவல் துறையினர், உடனடியாகச் செயல்பட்டு, இரண்டு இளையோர் உள்பட மூன்று பேர்களைக் கைது செய்தனர். குற்றம் சாற்றப்பெற்ற மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil