Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ராணுவத்திலும் சோசியல் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு; சி.ஐ.எஸ்.எஃப் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (08:55 IST)
நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களை கருத்தில் கொண்டு இந்திய துணை ராணுவத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சமீபகாலமாக ராணுவத்தில் பணிபுரிவோர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதன் மூலம் தகவல்கள் திருடப்படுவதான புகார்கள் உலகில் பல நாடுகளில் எழுந்துள்ளன. இதனால் அமெரிக்காவில் கப்பற்படை வீரர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய துணை ராணுவ படைகளில் ஒன்றான சி.ஐ.எஸ்.எஃப்-ல் 1 லட்சத்து 62 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு வீரர்களாக இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சி.ஐ.எஸ்.எஃப் தலைமையகம் பாதுகாப்பு வீரர்களுக்கு புதிய விதிமுறைகளை விதித்துள்ளது.

அதன்படி துணை ராணுவ வீரர்கள் தாங்கள் எந்தெந்த சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர் மற்றும் அதன் ஐடி விவரங்கள் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் ஒரு கணக்கை நீக்கிவிட்டு புதிய கணக்கு தொடங்கினாலும் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

நாட்டின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ, நாட்டின் அரசாங்க கொள்கைகளை விமர்சித்தோ பதிவுகளை, கமெண்டுகளை இட கூடாது. மீறி அவ்வாறு செய்யும் வீரர்கள் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments