Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய 10 ரூபாய் நோட்டு அறிமுகம்; ஆர்பிஐ தகவல்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (18:27 IST)
பணமதிப்பிழப்புக்கு பின் புதிய 10 ரூபாய் நோட்டு சாக்லேட் பிரவுன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

 
பணமதிப்பிழப்புக்கு பின் உயர் மதிப்பு ரூபாயான 2000 ரூபாய் வெளியிடப்பட்டது. புதிய 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளும் வெளியானது. அதேபோன்று புதிய 10 ரூபாய் நோட்டும் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி சார்பில் கடந்த மார்ச் மாதம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது புதிய 10 ரூபாய் நோட்டு சாக்லேட் பிரவுன் நிறத்தில் வெளியிட உள்ளதாக ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1 பில்லியன் 10 ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு இருப்பதாகவும், புதிய 10 ரூபாய் நோட்டுக்கான ஒப்புதலை கடந்த வாரம்தான் மத்திய அரசு வழங்கியதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
புதிய 10 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வந்தாலும் பழைய 10 ரூபாய் நோட்டு செல்லும் என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது. விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments