புதிய 10 ரூபாய் நோட்டு அறிமுகம்; ஆர்பிஐ தகவல்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (18:27 IST)
பணமதிப்பிழப்புக்கு பின் புதிய 10 ரூபாய் நோட்டு சாக்லேட் பிரவுன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

 
பணமதிப்பிழப்புக்கு பின் உயர் மதிப்பு ரூபாயான 2000 ரூபாய் வெளியிடப்பட்டது. புதிய 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளும் வெளியானது. அதேபோன்று புதிய 10 ரூபாய் நோட்டும் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி சார்பில் கடந்த மார்ச் மாதம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது புதிய 10 ரூபாய் நோட்டு சாக்லேட் பிரவுன் நிறத்தில் வெளியிட உள்ளதாக ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1 பில்லியன் 10 ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு இருப்பதாகவும், புதிய 10 ரூபாய் நோட்டுக்கான ஒப்புதலை கடந்த வாரம்தான் மத்திய அரசு வழங்கியதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
புதிய 10 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வந்தாலும் பழைய 10 ரூபாய் நோட்டு செல்லும் என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது. விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments