Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய 10 ரூபாய் நோட்டு அறிமுகம்; ஆர்பிஐ தகவல்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (18:27 IST)
பணமதிப்பிழப்புக்கு பின் புதிய 10 ரூபாய் நோட்டு சாக்லேட் பிரவுன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

 
பணமதிப்பிழப்புக்கு பின் உயர் மதிப்பு ரூபாயான 2000 ரூபாய் வெளியிடப்பட்டது. புதிய 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளும் வெளியானது. அதேபோன்று புதிய 10 ரூபாய் நோட்டும் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி சார்பில் கடந்த மார்ச் மாதம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது புதிய 10 ரூபாய் நோட்டு சாக்லேட் பிரவுன் நிறத்தில் வெளியிட உள்ளதாக ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1 பில்லியன் 10 ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு இருப்பதாகவும், புதிய 10 ரூபாய் நோட்டுக்கான ஒப்புதலை கடந்த வாரம்தான் மத்திய அரசு வழங்கியதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
புதிய 10 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வந்தாலும் பழைய 10 ரூபாய் நோட்டு செல்லும் என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது. விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments