Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல்; படம்பிடித்த செயற்கைக்கோள்

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (18:59 IST)
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் உளவு கப்பல் நகர்வு குறித்த புகைப்படங்களை இஸ்ரோவின் செயற்கைக்கோள் படம் எடுத்து உள்ளது.


 

 
இந்தியா நாட்டின் பாதுக்காப்புக்காக ராணுவம் 13 செயற்கைக்கோள்களை பயன்படுத்தி வருகிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி புதிதாக கார்டோசாட் 2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இந்த செயற்கைக்கோள் நாட்டின் பாதுகாப்பில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 
 
இதன்மூலம் இந்திய ராணுவம் அண்டை நாடுகளின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா மோதல் ஏற்பட்டு வருகிறது. நீண்ட காலமாக இருக்கும் எல்லை பிரச்சனை அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பலின் நகர்வை ருக்மினி நாவால் செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து உள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மலபார் கூட்டு கடற்படை பயிற்சி தொடங்க உள்ள நிலையில் அதனை கண்காணிக்கவே சீன உளவு கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல ஒருத்தனுக்கு ஒருத்தி.. ஆனா வட நாட்டுல 10 பேர்..? - அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!

உத்தர பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டம்! தார்ப்பாயால் மூடப்படும் மசூதிகள்!

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய கூடாது: மதுரை ஐகோர்ட் கிளை தடை..!

சென்னையில் ஒரு நாள் ஆட்டோக்கள் ஓடாது.. போராட்டத்தை அறிவித்த சங்கம்..!

இதுதான் உங்க இருமொழிக் கொள்கையா..? வெளங்கிடும்..! - பிடிஆரை விமர்சித்த அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments