Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின் வாங்கியது சீனா: இந்தியாவுக்கு இது வெற்றியா?

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (16:24 IST)
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன படைகள் பின்வாங்கின என தகவல்.
 
சில நாட்களுக்கு முன்னர் லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய படைகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது. எனினும் இந்த விவகாரத்தை பேசி தீர்க்க இருநாட்டு ராணுவ தரப்பிலும், அரசு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் சில நாட்களாக சீனா தனது ராணுவத்தை எல்லைப்பகுதியில் குவித்து வருவதாக சாட்டிலைட் படங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராணுவ ரீதியிலான பேச்சு வார்த்தைக்கு பிறகு எல்லைப்பகுதியிலிருந்து இரு நாட்டு வீரர்களும் பின்வாங்கிய பிறகு சீனா மீண்டும் படைகளை குவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன படைகள் பின்வாங்கின என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு கிடைத்த பலனாக இது அமைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments