லடாக் ஏரியில் பாலம்; மீண்டும் சீண்டும் சீனா! – தீவிர கண்காணிப்பில் இந்தியா!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (10:43 IST)
லடாக் பகுதியில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே மோதல் நடந்த பாஹ்காங் ஏரியில் சீனா பாலம் கட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீன படைகள் இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். அதேபோல சீன தரப்பிலும் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா கூறியது.

இதை தொடர்ந்து இருநாடுகளும் எல்லைப்பகுதியில் ராணுவத்தை குவித்த நிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு இந்தியா – சீனா இடையே நீண்ட நாட்களாக சர்ச்சையில் இருக்கும் இன்னொரு எல்லைப்பகுதியான பாங்காங் டிசோ ஏரியில் சீனா பல்வேறு கட்டமைப்புகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாங்காங் டிசோ பகுதியில் சீனா பாலம் ஒன்றை கட்டியது. அதை தொடர்ந்து தற்போது இரண்டாவதாக மற்றொரு பாலத்தை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் “ஆக்கிரமிக்கப்பட்ட பாங்காங் டிசோ ஏரியில் சீனா பாலம் அமைப்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?

4 ஆயிரம் கோடி எங்க போச்சி?.. மக்கள் மேல அக்கறை இருக்கா?!.. பொங்கிய விஜய்..

அடுத்த கட்டுரையில்
Show comments