Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் போகலையா நீங்க? எல்லையில் சீன ராணுவம்! – நீடிக்கும் பதற்றம்!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (08:19 IST)
லடாக் எல்லைப்பகுதியில் சீன – இந்தியா படைகளுக்கு ஏற்பட்ட மோதலின் விளைவாக இருநாட்டு படைகளும் திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்த நிலையிலும் சீன ராணுவம் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன – இந்திய ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு வீரர்களும் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இந்தியாவில் சீன பொருட்கள், செயலிகல் முதலியவை தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளாமல் இருக்க சமாதான பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அரசு மற்றும் ராணுவ தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய பின் எல்லை பகுதியில் இருந்து இரு நாட்டு படைகளையும் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி வழக்கமான எல்லைக்காவல் பணிகளில் இருக்கும் வீரர்களை தவிர்த்து கூடுதலாக குவிக்கப்பட்ட இந்திய வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். ஆனால் டெப்சாங் சமவெளி பகுதிகள் மற்றும் கோக்ரா பகுதிகளில் சீன படைகள் திரும்ப பெறப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அங்கு கிட்டத்தட்ட 40 ஆயிரம் சீன வீரர்களும், ராணுவ தளவாடங்களும் குவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது மேலும் எல்லையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments