Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காணாமல் போகும் குழந்தைகள்

காணாமல் போகும் குழந்தைகள்
, புதன், 25 மே 2016 (23:06 IST)
இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர். 


 

 
மே-25ஆம் தேதி காணமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காணாமல் போகும் குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் வகையிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
 
ஓர் ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதில் பெண் குழந்தைகள் 55 சதவீதம், ஆண் குழந்தைகள் 45 சதவீதம்.
 
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சைல்டு லைன் இயக்குநர் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
குழந்தை கடத்தல், படிக்க விருப்பமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் வீட்டைவிட்டு வெளியேறுதல் ஆகிய காரணங்களால் குழந்தைகள் காணாமல் போகின்றனர். அவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் சில நேரங்களில் கொல்லப்படுவதுடன், சில நேரங்களில் கடத்தல் தொழில், பாலியல், கொத்தடிமைகள், பிச்சை எடுத்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். 
 
எனவே, காணாமல்போகும் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இருக்கவேண்டும். சைல்டுலைன் பற்றியும் பொது மக்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். காணாமல் போன குழந்தைகளை விரைவாகவும் பத்திரமாகவும் மீட்கும் பணியில் சைல்டுலைன் அமைப்பு ஈடுபட்டுள்ளது.
 
மேலும் குழந்தைகளுக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தாமல், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறிய கருணாநிதி