Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தீஸ்கர் உயிரிழப்புகள்: கொடுக்கப்பட்ட மருந்தில் எலி நஞ்சு

Webdunia
ஞாயிறு, 23 நவம்பர் 2014 (19:02 IST)
அண்மையில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் உயிரிழந்த 15 பெண்களுக்கும் கொடுக்கப்பட்ட மருந்துகளில் நச்சு இரசாயனம் கலந்திருந்ததாக சத்தீஸ்கரின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
 
பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளில் ஸின்க் ஃபொஸ்பைட் என்ற நச்சு இரசாயனம் கலந்துள்ளமை பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக சத்தீஸ்கர் மாநிலத்தின் சுகாதார அமைச்சர் அமார் அகர்வால் கூறியுள்ளார்.
 
இந்த இரசாயனம் எலி நஞ்சிலும் பயன்படுத்தப்படும் நச்சுப் பொருளாகும்.
 
இந்த மாதத்தின் ஆரம்பத்தில், அரசாங்கத்தின் இரண்டு சிகிச்சை முகாம்களில் அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளான 130 பெண்களில் 15 பேர் உயிரிழந்தனர்.
 
இந்த உயிரிழப்புகள் தொடர்பில், அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவரும் இரண்டு மருந்துத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments