Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தாம்பரம் - ஜார்காண்ட் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே தகவல்..!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (09:53 IST)
சென்னை தாம்பரத்திலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத் என்ற நகரத்திற்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே அறிவித்துள்ளது 
 
ஜூலை 14ஆம் தேதி இரவு 10 மணிக்கு தாம்பரத்திலிருந்து இந்த சிறப்பு ரயில் கிளம்பும் என்றும் இந்த ரயில் ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் நகருக்கு ஜூலை 17ஆம் தேதி காலை சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் மறு மார்க்கமாக ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் நகரில் இருந்து ஜூலை 18ஆம் தேதி கிளம்பி ஜூலை 20ஆம் தேதி சென்னை தாம்பரம் வந்தடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
முன்பதிவு இல்லாத ரயில் என்பதால் இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள் நேரடியாக கவுண்டர்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வட மாநில தொழிலாளர்களுக்காக இந்த சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments