சென்னை தாம்பரம் - ஜார்காண்ட் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே தகவல்..!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (09:53 IST)
சென்னை தாம்பரத்திலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத் என்ற நகரத்திற்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே அறிவித்துள்ளது 
 
ஜூலை 14ஆம் தேதி இரவு 10 மணிக்கு தாம்பரத்திலிருந்து இந்த சிறப்பு ரயில் கிளம்பும் என்றும் இந்த ரயில் ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் நகருக்கு ஜூலை 17ஆம் தேதி காலை சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் மறு மார்க்கமாக ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் நகரில் இருந்து ஜூலை 18ஆம் தேதி கிளம்பி ஜூலை 20ஆம் தேதி சென்னை தாம்பரம் வந்தடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
முன்பதிவு இல்லாத ரயில் என்பதால் இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள் நேரடியாக கவுண்டர்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வட மாநில தொழிலாளர்களுக்காக இந்த சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments