Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய படைவீரர்களை சுட்டுக் கொன்ற சக வீரர்! – சத்தீஸ்கரில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (12:25 IST)
சத்தீஸ்கரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய படை வீரர்களை சக வீரரே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டம் லிங்கம் பகுதியில் துணை ராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த முகாமில் மத்திய ரிசர்வ் படையினர் தங்கியிருந்தனர். அதிகாலை 3.30 மணியளவில் பணியில் இருந்த ஒரு வீரர் ஏகே47 துப்பாக்கியால் உறங்கி கொண்டிருந்த சக வீரர்களை சரமாரியாக சுட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 3 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த சிலர் அவரை பிடித்து கைது செய்துள்ளனர். அவர் எதற்காக இவ்வாறு செய்தார் என்பது குறித்து உயரதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments