தெலுங்கானா மாநில முதலமைச்சராக உள்ள சந்திரசேகரராவின் மகள் கவிதா பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்தை வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் சேர்த்துக்கொண்டதாக கவிதா கூறியதை தொடர்ந்து அவர் மீது தேசத்துரோகம், தேச ஒற்றுமைக்கு ஊறுவிளைவித்தல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக காஷ்மீரில் உள்ள சில பகுதிகள் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்று இந்த வருட ஆரம்பத்தில் அவர் கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.