கொடியேற்றிய ஆளுனர்! நிகழ்ச்சிக்கு வராத முதல்வர்! – மீண்டும் மோதல்!

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2023 (11:48 IST)
இன்று குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் தெலுங்கானாவில் ஆளுனர் கொடியேற்றிய நிகழ்விற்கு முதல்வர் வராதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில் முதலமைச்சராக சந்திரசேகர் ராவ் இருந்து வருகிறார். இந்நிலையில் சந்திரசேகர் ராவுக்கும் அம்மாநில பாஜகவுக்குமிடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. சமீபத்தில் சில நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி தெலுங்கானா வந்தபோதுகூட அவரை வரவேற்கவோ, நிகழ்ச்சிகளிலோ சந்திரசேகர் ராவ் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று குடியரசு தின விழாவில் ஆளுனர் மாளிகையில் அம்மாநில ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் கொடியேற்றினார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கலந்து கொள்ளவில்லை. தெலுங்கானாவில் நிகழ்ச்சிகள் முடிந்து புதுச்சேரி செல்லும் ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments