Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்திரபாபு நாயுடுவை கொல்ல சதி: ஆந்திர அமைச்சர் திடுக்கிடும் தகவல்

சந்திரபாபு நாயுடுவை கொல்ல சதி: ஆந்திர அமைச்சர் திடுக்கிடும் தகவல்
, வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (07:27 IST)
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கொலை செய்ய சிலர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக, அம்மாநில வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபாலகிருஷ்ண ரெட்டி கூறியுள்ளார். 
 
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கொல்ல செம்மர கடத்தல்காரர்கள் சிலர் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம், சி.ஐ.டி. அலுவலகம் ஆகியவற்றுக்கு மர்ம கடிதம் வந்திருப்பதாக, அம்மாநில வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபாலகிருஷ்ண ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
சந்திரபாபு நாயுடு சமீபத்தில் அனந்தப்பூர் மாவட்டத்துக்கு சென்றபோது இதற்காக ஒத்திகை பார்த்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil