Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து கோவில் அதிகாரிகள் பணி, இனி இந்துகளுக்கு மட்டுமே: சந்திரபாபு நாயுடு

Mahendran
சனி, 28 செப்டம்பர் 2024 (12:59 IST)
இந்து கோவில்களில் உள்ள அதிகாரிகள் பணி இனி இந்துக்களுக்கு மட்டுமே வழங்க புதிய சட்டம் இயற்றப்படும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு மதமும் தனித்த கலாச்சாரம் மற்றும் சம்பிரதாயத்தை உடையது என்றும், அந்த கடவுளின் பழக்கவழக்கங்கள், மரபுகள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடவுள் மற்றும் சடங்குகளை விட யாரும் பெரியவர்கள் இல்லை என்று தெரிவித்தார்.

எனவே தான் ஆந்திர மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. எந்த வழிபாட்டு தலமாக இருந்தாலும், அதாவது மசூதியாக இருந்தாலும், தேவாலயமாக இருந்தாலும், கோவிலாக இருந்தாலும், அந்தந்த மதத்தினருக்கே அந்த வழிபாட்டு தலங்களில் பதவி வழங்கப்படும்.

குறிப்பாக, இந்து கோவில்களில், இந்துக்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments