Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்க வாய்ப்பே இல்ல! – மத்திய அரசு கறார்!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (15:07 IST)
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் வழக்கில் நடப்பாண்டில் இடஒதுக்கீடு வழங்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவ மேல்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரி தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைகள் தொடங்க உள்ள நிலையில் நடப்பாண்டிலேயே 50% இடஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு “மருத்துவ மேல் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பு ஆண்டிலேயே 50% இட ஒதுக்கீடு வழங்குவது சாத்தியமற்றது” என தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த பதிலுக்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments