வாட்ஸ் அப் விவகாரம்: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கருத்து!

Webdunia
புதன், 26 மே 2021 (18:43 IST)
சமூக வலைதளங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய விதிகள் தனிமனித உரிமையை மீறுவதாகும் என வாட்ஸ்அப் டெல்லி ஐகோர்ட்டில் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் கருத்துக் கூறியுள்ளது
 
தனிமனித உரிமைக்கு மதிப்பளிப்பது தங்களின் நோக்கம் என்றும் அதே நேரத்தில் குற்றத்தை கட்டுப்படுத்த புதிய வழிபாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதை வாட்ஸ்அப் பின்பற்ற மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது
 
மேலும் தனி மனித உரிமை குறித்து பேசும் வாட்ஸ்அப் தங்களது அனைத்து தரவுகளையும் தாய் நிறுவனமான பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு வருகிறது என்றும் மத்திய தகவல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
பாலியல் ரீதியான குற்றங்கள் தடுப்பதற்கு கண்டிப்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் சமூக வலைதளங்களுக்கு தேவைப்படுவதாக மத்திய தகவல் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது/ ஏற்கனவே பல சமூக வலைதளங்கள் மத்திய அரசின் புதிய கொள்கையை ஏற்றுக்கொண்ட நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒருமைல்கல்.. வாக்காளர் பட்டியல் திருத்த பணி குறித்து தேர்தல் ஆணையர்..!

தெருநாய்கள் விவகாரம்: ஆஜராகாத தலைமை செயலாளர்களுக்கு கண்டிப்பு.. நவம்பர் 7ஆம் தேதி புதிய உத்தரவு..!

திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு கொடிய சான்று கோவை வன்கொடுமை சம்பவம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

பீகார்ல பேசுனதை தைரியம் இருந்தா தமிழ்நாட்டுல பேசுங்க பாப்போம்! - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் சவால்!

சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 3 மர்ம நபர்கள்.. நள்ளிரவில் கோவையில் நடந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்