Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'6 வயது நிரம்பிய பின்னரே 1ஆம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்..!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (17:29 IST)
குழந்தைகள் 6 வயது நிரம்பிய பின்னர் தான் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்துள்ளது. இது குறித்து அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. 
 
அதில் ’நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு சேர்ப்பதற்கு குழந்தைகளுக்கு ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்றும் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் வயதை ஆறாக உயர்த்த வேண்டும் என்று அறிவுறுத்துள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் மூன்று வயதில் குழந்தைகளைப் பிரிகேஜி உள்ளிட்ட வகுப்புகளில் சேர்க்கலாம் என்றும் எல்கேஜி யுகேஜி படிக்க அனுமதி உண்டு என்றும் ஆனால் ஒன்றாம் வகுப்பில் சேரும்போது அந்த குழந்தைக்கு ஆறு வயது இருந்தால் மட்டுமே சேர்க்க வேண்டும் என்றும் இது குறித்து அனைத்து மாநில அரசுகளும் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
புதிய தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments