Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்ம விருதை யாருக்கு வழங்கலாம்? நீங்களே சொல்லுங்க! – மக்களிடம் கேட்கும் மத்திய அரசு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (08:23 IST)
மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கலை, இலக்கியம், சினிமா, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தின்போது வழங்கப்படும்.

இந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் “பத்ம விருதுகளை மக்கள் விருதாக மாற்ற மத்திய அரசு உறுதி எடுத்துள்ளது. எனவே, பெண்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடையே பத்ம விருதுகளுக்கு தகுதியான சாதனையாளர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு சிபாரிசு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான விவரங்கள் பத்ம விருதுகளுக்கான அதிகார்ப்பூர்வ வலைதளத்தில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments