Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு: ரூ.75 நாணயம் வெளியீடு! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (08:45 IST)
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ள நிலையில் அதை சிறப்பிக்கும் விதமாக ரூ.75 நாணயம் வெளியிடப்படுவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் வரும் மே 28ம் தேதியன்று பிரதமர் மோடி இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பை சிறப்பிக்கும் விதமாக ரூ.75 நாணயத்தை வெளியிடுவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நாணயத்தின் ஒரு புறம் அசோக சின்னமும், அதன் கீழ் 75 என்ற எண்ணும் இடம்பெறும். இடதுபுறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவநாகரியிலும், வலதுபுறம் இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் இடம்பெறும்.

மற்றொரு பக்கம் புதிய நாடாளுமன்றத்தி படம் அச்சிடப்பட்டிருக்கும். குறைந்த அளவிலேயே இந்த நாணயங்கள் அச்சிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments