Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி மோசடி வழக்குகளை இனி அமலாக்கத்துறை விசாரிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2023 (10:34 IST)
ஜிஎஸ்டி மோசடி வழக்குகளை இனி அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சட்டவிராத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவு பிரிவு ஆகியவற்றுடன் தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில் தற்போது ஜிஎஸ்டி நெட்வொர்க்கை மத்திய அரசாங்கம் இணைத்துள்ளது. 
 
இதன்படி அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவு பிரிவு ஜிஎஸ்டி குறித்த முறைகேடு வழக்குகளை விசாரிக்க அதிகாரம் உண்டு என்பது தெரியவந்துள்ளது. 
 
இந்தியாவில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜிஎஸ்டி அடையாள எண்கள் உள்ள நிலையில் அதில் 25% போலியானது என்று அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து தற்போது இந்த தற்போது அமலாக்கத்துறைக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜிஎஸ்டியின் முழு அமைப்பை மத்திய அரசு கொண்டு வந்ததால் இனிய ஜிஎஸ்டி மோசடி தொடர்பான புகார்களை அமலாக்கத்துறை தான் விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments