Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் வருகிறது 5ஜி தொழில்நுட்பம்! – ஒப்புதல் வழங்கிய அமைச்சரவை!

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (13:03 IST)
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த அலைக்கற்றை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது 4ஜி சேவைகள் பிரபலமானதாக இருந்து வருகின்றன. இதன் அதிவேக இணைய வசதிக்கு ஏற்ப சந்தையில் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரையிலான 4ஜி ஸ்மார்ட்போன்களும் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிரமாக காத்திருக்கின்றன.

இப்போதே ஆன்லைன் சந்தைகளில் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து மத்திய அமைச்சரவையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையில் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றைக்கான ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

5ஜி அலைக்கற்றையின் வேகமானது 4ஜியை விட 10 மடங்கு அதிகமானதாக இருக்கும் என்பதால் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாவதில் பலரும் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments