Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”முதலாளிகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மத்திய அரசு விமர்சிக்கிறது” - சீத்தாராம் யெச்சூரி

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (12:14 IST)
மத்திய பாஜக அரசு எதிர்க் கட்சிகளை விமர்சிக்க நாட்டின் பெருமுதலாளிகள் மற்றும் ஊடகத்தை பயன்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டினர்.
 
நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக நாட்டின் பெருமுதலாளிகள் கூட்டாக அறிக்கை விட்டிருந்தனர். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கக்கூடாது என்று அவர்கள் ‘அறிவுரை’ கூறியிருந்தனர்.
 
இதுகுறித்து புதனன்று மாநிலங்களவையில் பேசிய சீத்தாராம் யெச்சூரி, "ஊடகங்கள் மற்றும் பெருமுதலாளிகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மத்திய ஆளும் அரசு விமர்சிக்கிறது. நாடாளுமன்ற முடக்கத்திற்கு காரணம் எதிர்க்கட்சிகள் அல்ல, ஊழல் அமைச்சர்கள் குறித்து விவாதிக்க மறுத்த ஆளுங்கட்சி தான் என்று கூறினார்.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments