Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்ப்பையும் மீறி என்எல்சி பெயர் மாற்றம்

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (16:20 IST)
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்ற பெயர் என்.எல்.சி இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

 
1956ம் ஆண்டு ஜம்புலிங்க முதலியார் என்பவரால் கொடுக்கப்பட்ட 600 ஏக்கர் நிலத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
 
நாடு முழுவதும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் இருப்பதால் என்.எல்.சி என பொதுப்பெயர் சூட்டுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு தமிழகத்தில் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 
தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி என்.எல்.சி நிறுவனத்தின் பெயரை, தற்போது என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்துள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
என்.எல்.சி.யில் மத்திய அரசுக்கு 90 சதவிகித பங்கும், தமிழக அரசுக்கு 5 சதவிகித பங்கும், தொழிலாளர்களுக்கு 5 சதவிகித பங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments