Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக விலைக்கு இந்த மாஸ்க்கை வாங்காதீங்க!? – மத்திய அரசு அறிவுறுத்தல்

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (15:42 IST)
கொரோனா தொற்றை தடுக்க அதிக விலை கொண்ட எந்95 முகக்கவசங்களை வாங்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் மக்கள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமான நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. மக்கள் பலர் அதிக செலவில் இல்லாமல் குறைந்த விலை கொண்ட துணியால் ஆன முகமூடிகளையே பயன்படுத்தி வருகின்றனர். எனினும் ஒரு சிலர் அதிக விலை கொடுத்து என் -95 வகை வால்வு முகமூடிகளை வாங்கி அணிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் வால்வுகள் கொண்ட முகக்கவசங்களால் கொரோனாவை எந்த வகையிலும் தடுக்க இயலாது. துணிகளால் ஆன முகக்கவசங்களே போதுமானது. எனவே வால்வுகள் கொண்ட முகக்கவசங்களை மக்கள் தவிர்ப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என அந்த பரிந்துரையில் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விரைவில் மாநில அரசுகள் விரிவான விதிமுறைகளை விளக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments