Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரத் பெட்ரோலியம், எல்ஐசி, ஏர் இந்தியா நிறுவன பங்குகள் விற்பனை! – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (12:11 IST)
மத்திய அரசின் 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நடந்து வரும் நிலையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா பாதிப்பிற்கு பிறகு தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் பலரும் இதை தீவிரமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

சுகாதாரம், ரயில்வே உள்ளிட்டவற்றிற்கு பட்ஜெட் அறிவிப்புகள் வெளியான நிலையில் பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய முதலீடு சதவீதம் 49லிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் எல்.ஐ.சி பங்குகளை விற்க IPO திட்டமும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments