Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கல்: சிறப்புக்குழு அமைக்க மும்முரம்!

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (21:15 IST)
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகளுக்காக சிறப்பு குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

ரயில்வே துறையை தனியார் மயமாக்க போவதாக மத்திய அரசு அறிவித்ததிலிருந்தே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்ப தொடங்கின. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத மத்திய அரசு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை தனியார் வசம் ஒப்படைத்தது.

பல்வேறு ரயில் நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும் அவற்றை தனியாருக்கு குறிப்பிட்ட கால அளவில் டெண்டருக்கு விடுவதன் மூலம் சீரமைக்க முடியுமென்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பராமரிப்பற்றதாக கண்டறியப்பட்ட 400 ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக 50 ரயில் நிலையங்களும், 150 ரயில்களும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்காக தனியாக ஒரு சிறப்பு குழுவை அமைத்து டெண்டர் பணிகளை மேலாண்மை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஆறு விமான நிலையங்களை தனியார் மயமாக்க இதுபோலவே சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments