Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி ஸ்டாக் விவரங்களை மக்களிடம் சொல்ல வேண்டாம்?? – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (09:48 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி இருப்பு விவரங்களை பொதுவெளியில் பகிர வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தடுப்பூசிகள் மத்திய அரசின் மூலமாக மாநில அரசுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தடுப்பூசி கையிருப்பு, செலுத்தப்பட்டவை உள்ளிட்ட தகவல்களை மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பூசி கையிருப்பு, வழங்கல் நிலை, சேமிப்பு நிலை குறித்த தகவல்கள், தரவுகளை மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சுற்றறிக்கை இரண்டு நாட்கள் முன்னதாக அனுப்பப்பட்ட போதிலும் தமிழக அரசு தடுப்பூசி தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments