Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.70,000 கோடியை கிடப்பில் போட்ட மத்திய அரசு...

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (20:05 IST)
கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய கடற்படைக்கு அதிநவீனமான ஆறு நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்காக Project 75 India என்ற திட்டம் மத்திய அரசால் வகுக்கப்பட்டது. 
 
இந்த கப்பல்களை தயாரிக்க ரூ.70,000 கோடி செலவு செய்ய முடிவுசெய்யப்பட்டது. திட்டத்திற்கான தொகையை அளிக்கும் ஒப்புதல் கிடைத்துவிட்டது என்று பாதுகாப்புத்துறை வட்டாத்தில் கூறப்படுகிறது. 
 
இருப்பினும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பதற்கான ரூ.70,000 கோடி மதிப்பிலான திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி நிதி வழங்கலுக்கான ஒப்புதல் காலாவதியாகிறது.
 
இதனால், மீண்டும் இத்தொகை ஒதுக்கீடுக்கு உரிய கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. ஆனாலும், இந்த திட்டத்தில் ஒரு கப்பலை முழுதும் உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர குறைந்தது 8 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments