ரூ.70,000 கோடியை கிடப்பில் போட்ட மத்திய அரசு...

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (20:05 IST)
கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய கடற்படைக்கு அதிநவீனமான ஆறு நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்காக Project 75 India என்ற திட்டம் மத்திய அரசால் வகுக்கப்பட்டது. 
 
இந்த கப்பல்களை தயாரிக்க ரூ.70,000 கோடி செலவு செய்ய முடிவுசெய்யப்பட்டது. திட்டத்திற்கான தொகையை அளிக்கும் ஒப்புதல் கிடைத்துவிட்டது என்று பாதுகாப்புத்துறை வட்டாத்தில் கூறப்படுகிறது. 
 
இருப்பினும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பதற்கான ரூ.70,000 கோடி மதிப்பிலான திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி நிதி வழங்கலுக்கான ஒப்புதல் காலாவதியாகிறது.
 
இதனால், மீண்டும் இத்தொகை ஒதுக்கீடுக்கு உரிய கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. ஆனாலும், இந்த திட்டத்தில் ஒரு கப்பலை முழுதும் உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர குறைந்தது 8 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிட்வா புயல் எதிரொலி.. சென்னை எழிலகத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு மையம்..!

ஆபரேஷன் சிந்தூர் 2.0க்கு தயாராக இருக்கிறோம்.. எல்லை பாதுகாப்பு படை அதிரடி..!

டிட்வா புயல் எதிரொலி: இன்று காலை 18 மாவட்டங்களில் மழை பெய்யும்..

சென்னைக்கு தெற்கே 250 கி.மீ தொலைவில் டிட்வா புயல்.. மெரினாவியில் பலத்த காற்று.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..

அடுத்த கட்டுரையில்
Show comments