Webdunia - Bharat's app for daily news and videos

Install App

37 மத்திய விருதுகள் ரத்து; நோபல் லெவலுக்கு புதிய விருது? – ஆலோசனையில் அமைச்சகம்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (09:00 IST)
மத்திய அரசின் சார்பில் அறிவியல் துறைகளில் வழங்கப்படும் ஏராளமான விருதுகளை குறைத்துவிட்டு, நோபல் போல அதிக அந்தஸ்து கொண்ட விருதை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

மத்திய அரசின் விருதுகள் குறித்து சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி ஒட்டுமொத்த விருது வழங்கும் முறையையும் மாற்றி அமைக்குமாறும், விருது வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும்படியும் பேசியிருந்தார்.

மத்திய அரசின் சார்பில் தற்போது தனி நன்கொடை விருது, உள்விருதுகள் மற்றும் பெலோஷிப் என 300க்கும் மேற்பட்ட விருதுகள் அறிவியல், மருத்துவ பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து 8 விதமான அறிவியல் மற்றும் சுகாதாரத்துறைகளுடன் பேசிய மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, ஏராளமாக வழங்கப்படும் சிறிய விருதுகளை குறைத்து, அனைத்து அறிவியல் பிரிவுகளிலும் நோபல் பரிசு போல ”விஞ்ஞான் ரத்னா” என்ற அந்தஸ்து மிக்க விருதை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் சிறிய அளவில் வழங்கப்படும் 37 வகையான விருதுகளை ரத்து செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. இன்று பள்ளிகள் விடுமுறை எங்கே?

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments