Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழ வியாபாரிக்கு பத்ம ஸ்ரீ விருது: அப்படி என்ன சாதித்தார்?

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (10:56 IST)
கர்நாடகாவில் உள்ள எழுத படிக்க தெரியாத பழ வியாபாரி ஒருவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மிக உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவை சேர்ந்த பழ வியாபாரி ஹரேகலா கஜப்பா. நியூபடப்பு கிராமத்தை சேர்ந்த இவர் எழுத படிக்க தெரியாதவர். கூடையில் ஆரஞ்சு பழங்களை கொண்டு சென்று ஊர் ஊராக விற்று வருபவர். தனது கிராமத்தில் உள்ள குழந்தைகள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தனது சொற்ப வருமானத்திலும் கொஞ்சம் பணம் சேர்த்து பிற இடங்களில் கடன் வாங்கி தனது கிராமத்திலேயே முதன்முறையாக பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார். ஏழ்மையான நிலையிலும் மாணவர்கள் படிக்க கஜப்பா செய்த இந்த முயற்சியை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

இதுபற்றி எதுவுமே அறியாமல் ரேசன் கடையில் பொருட்கள் வாங்க வரிசையில் காத்திருந்த கஜப்பாவிடம் அதிகாரிகள் சென்று இந்த தகவலை தெரிவித்துள்ளனர். கஜப்பாவின் முயற்சிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments