Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச விமானப் போக்குவரத்து தடை நீட்டிப்பு! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (08:19 IST)
கொரோனா காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு முதலாக சர்வதேச விமான சேவைகளுக்கு இந்தியா தடை விதித்தது. இதனால் சிறப்பு விமானங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிசம்பர் 15 முதல் மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

தற்போது ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒமிக்ரான் பரவல் பாதிப்பை பொறுத்து இது மேலும் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

ஜெயலலிதா தீவிர இந்துத்துவா தலைவர் என்பதை அதிமுக உடன் விவாதிக்க தயார்: அண்ணாமலை

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு.. உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்...!

பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியதற்கு அதானி தான் காரணம்: ராகுல் காந்தி

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments